சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்து எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர் இனிப்புகள் மற்றும் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ராயப்பேட்டை அலுவலகத்துக்கு வந்தார். அவரை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், பென்ஜமின், சரோஜா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முதல்வர் எடப்பாடியும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். பின்னர், கட்சி அலுவலகத்திற்கு சென்று கூடி இருந்த தொண்டர்கள் மத்தியில் பேசினர்.பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இது உண்மைக்கு கிடைத்த வெற்றி. இந்த கூட்டணி தொடரும்.