கல்பாக்கம் அணுசக்தி துறை மையத்தில் அவசர நிலை ஒத்திகை

சென்னை: அணுசக்தி துறையின் கல்பாக்கம் மையத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் அணு மறுசுழற்சி முன்மாதிரி அதிவேக ஈனுலை (அணுமின் திட்டம்) மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மைய பிரிவுகள் உள்ளன. இங்கு அவசரகால தயார் நிலை திட்டத்தின்படி வளாக அவசர நிலை ஒத்திகை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. பல பாதுகாப்பு அடுக்குகளை உடைய சென்னை அணுமின் நிலைய அணு உலையில் இம்மாதிரியான விபத்து நடக்க சாத்தியக் கூறுகள் மிக குறைவு என்றாலும், நிலையத்தின் அவசரநிலை தயார்நிலை செயல்பாட்டை சோதிக்கும் வண்ணமாக இருப்பதே முக்கிய நோக்கமாகும்.

கல்பாக்கம் வளாக அவசரநிலை நிர்வாக குழுவின் தலைவரான சென்னை அணுமின் நிலைய இயக்குனர் சீனிவாசன் முன்னின்று நடத்தினார். நிலைய ஊழியர்களை பாதுகாப்பான கட்டிடங்களில் இருக்க செய்தல். காயமடைந்த ஊழியர்களுக்கு சிகிச்சை தருவது, அத்தியவாசிய ஊழியர்கள் அல்லாத பிற ஊழியர்கள் வளாகத்தில் இருந்து வெளியேற்றி நகரில் சேர்த்தல், கதிரியக்கம் மாசுபட்ட வண்டியை சுத்தம் செய்வது போன்ற ஒத்திகை நடைபெற்றது. கல்பாக்கம் அணுசக்தி துறையைச் சேர்ந்த இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் அணு மறுசுழற்சி முன்மாதிரி அதிவேக ஈனுலை, பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் மற்றும் அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் கண்காணித்தனர். இதன் ஒரு பகுதியாக 3,500 பேர் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் பேருந்துக ள் மூலமாக வெளியேற்றும் செய்யப்பட்டனர். இந்த வெளியேற்றம் 2 மணி நேரத்தில் நடந்தேறியது, முழு ஒத்திகை 3 மணி நேரத்தில் முடிக்கப்பட்டது.

Related Stories: