தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர் அலுவலக பணிக்கு 31ல் விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை : தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை : திருவொற்றியூரில் உள்ள தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடம் இன சுழற்சி முறையில் நிரப்பப்படவுள்ளது.

பத்தாம் வகுப்புக்கு மேற்கல்வி தகுதியுடைய பிசி, எம்சி, எஸ்சி, எஸ்சி (ஏ) மற்றும் எஸ்டி வகுப்பினருக்கு வயது உச்சவரம்பு இல்லை. இதற்கான அறிவிப்பு www.dish.tn.gov.in என்ற இணைதளத்தில் முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணை இயக்குநர் அலுவலகம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், எண் : 15, ஸ்டேட் பேங்க் காலனி, 2வது தெரு, திருவொற்றியூர், சென்னை - 19 என்ற முகவரிக்குள் 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: