சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று முடிந்துள்ள 5 கட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ள பொருட்களை மதுரை உலக தமிழ்ச்சங்க வளாகத்தில் காட்சிப்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் தற்பொழுது வரை 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. கீழடியிலேயே இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச அளவிலான அருங்காட்சியகம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது தற்காலிகமாக மதுரையில் இருக்கக்கூடிய உலக தமிழ்சங்க கட்டிட வளாகத்தில் கீழடியில் 5 கட்டங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.