தீபாவளி சிறப்புக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை ரத்து செய்து பணத்தினை திருப்பிக் கொடுக்க வலியுறுத்தல்

சென்னை: தீபாவளி சிறப்புக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை ரத்து செய்து, பணத்தினை திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியுள்ளோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். மேலும் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ரூ.2,000 வரை பணம் செலவழிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என தெரிவித்தார். பிகில் படம் மட்டுமல்ல எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை என தெரிவித்தார்.

Related Stories: