சென்னை: இலங்கையில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு வந்தது. அதில் வந்த இலங்கையை சேர்ந்த ஆனந்தா ரீகன் (37), மேரி சந்திரகலா (41) என்ற இரண்டு பெண்களை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தினர். அவர்கள் தங்கள் புடவை மடிப்புகளுக்குள் கொத்துக் கொத்தாக புத்தம் புதிய தங்க செயின்கள் வைத்திருந்தனர். அதன் மதிப்பு 25.5 லட்சம். மேலும் துபாயில் இருந்து டெல்லிக்கு தங்கம் வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் டெல்லியில் இருந்து நேற்று பகல் 12.30 மணிக்கு ஏர் இண்டியா விமானத்தில் வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரஜாக் அகமது (50) என்பவரின் சூட்கேசின் ரகசிய அறையில் 20 தங்க கட்டிகள் இருந்தன. அதன் மொத்த எடை 2 கிலோ 360 கிராம், அதன் மதிப்பு 93.6 லட்சம்.