சென்னை: டெங்கு காய்ச்சல் தடுப்பு என்பது நாடு முழுவதுமே சவாலாக உள்ளது. இதுவரை 3900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சென்னை ராஜிவ்காந்தி மற்றும் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது சவாலாகவே உள்ளது.