தீபாவளிக்கு மது விற்பனை செய்ய இலக்கு?: டாஸ்மாக் எம்டி விளக்கம்

சென்னை: டாஸ்மாக் நிறுவனம் தீபாவளிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கவில்லை என்று நிர்வாக இயக்குநர் மறுத்துள்ளார்.இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) எந்த வருடமும் எந்த பண்டிகையை முன்னிட்டும் மது விற்க இலக்கு நிர்ணயிப்பதில்லை. அவ்வாறே  இந்த 2019ம் ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுவிற்க இலக்கு நிர்ணயிக்கவில்லை. ஆனால், பத்திரிகைகளில், 350 கோடிக்கு விற்க இலக்கு நிர்ணயம் என்று செய்தி வெளியாகியுள்ளது.

Related Stories: