டோக்கியோ: ஜப்பானின் பேரரசராக இருந்த அகிஹித்தோ கடந்த மே மாதம் பதவி விலகியதை அடுத்து, 126-வது பேரரசராக நரிஹித்தோ அறிவிக்கப்பட்டார். இவரது முடிசூட்டு விழா திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. பல நூற்றாண்டுகளாக ஜப்பான் மக்கள் பின்பற்றும் பாரம்பரிய முடிசூட்டு விழாவில் பங்கேற்க காரில் வந்த பேரரசர் நரிஹித்தோவுக்கு வழிநெடுகிலும் மக்கள் கொட்டு மழையிலும் குடைபிடித்தபடி நின்று ஆரவாரம் எழுப்பினர். இளவரசர் சார்லஸ், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே, முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி மற்றும் பிரேசில் தலைவர் ஜெய்ர் போல்சனாரோ உள்பட 180 நாடுகளை சேர்ந்த சுமார் 2,000 தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.