நாங்குநேரி: நாங்குநேரி தொகுதியில் வடுகச்சிமதில் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதாகி உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 3 முறை வாக்குப்திவு இயந்திரங்கள் பழுதானதால் வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள் தவித்து வருகின்றனர். 91-ம் நெம்பர் வாக்குசாவடியில் 3 முறை வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையிலேயே வாக்காளர்கள் வந்து வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.