சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் அக்டோபர் 23ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், உள்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தோவாலா 13 சேமீ, சிவலோகம் 12 சேமீ, வேடசந்தூர் 7 சேமீ, மழை பதிவாகியுள்ளது.