சென்னை: சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு மீது பொன். மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல பழமையான கோயில்களில் இருந்து பல புராதன சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுகுறித்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பொன்.மாணிக்கவேலுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. ஆனால், அவருக்கு தமிழக அரசு வசதிகளை செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டுடன் தமிழக அரசு மீது பொன்.மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.