பெங்களூரு: லலிதா ஜுவல்லரி நகை கடை கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட முருகனை 8 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க பெங்களூரு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் மிக முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட முருகன் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களுருவில் இருந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன் பிறகு அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து பெங்களுருவில் உள்ள காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அந்த விசாரணையின் போது அவனை திருச்சி அழைத்து சென்று காவிரி ஆற்றங்கரை அருகில் அவன் புதைத்து வைத்திருந்த சுமார் 12 கிலோ தங்கத்தை மீட்டனர்.
லலிதா ஜுவல்லரி நகை கடை கொள்ளை: கொள்ளையன் முருகனை கர்நாடக மாநில போலீஸ் மேலும் 8 நாள் விசாரிக்க அனுமதி
- லலிதா ஜூவல்லரி நகைக் கடை
- கர்நாடக மாநில காவல்துறை
- கர்நாடக மாநில காவல்துறை கொலை குறித்து விசாரணை நடத்துகிறது
- லலிதா நகைகள்