சென்னை: வறுமையை ஒழிப்பதற்கான பொருளாதார திட்டங்களை வகுத்தமைக்காக 2019ம் ஆண்டிற்கான ‘நோபல் பரிசு’ அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜி தம்பதிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து அறிக்கை:பொருளாதார மேதை அபிஜித் பானர்ஜி மற்றும் அவருடைய மனைவி எஸ்தர் டுப்ளோ ஆகிய இருவரும் இயக்குநர்களாக உள்ள ஜே-பால் நிறுவனமும் தமிழ்நாடு அரசும் 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு, இதுவரை 7 துறைகளில் 15 ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர்.