சென்னை: மக்களை பாதிக்கும் வகையில் கட்டணங்கள் உயர்த்துவதற்காக ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து மிக விரைவில் மிகப்பெரிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளன பொது செயலாளர் அறிவித்துள்ளார்.அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சிவகோபால மிஸ்ரா நேற்று காலை டெல்லியில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:ரயில்வேயில் சில அபிவிருத்திக்கான ஆய்வுசெய்ய அமைத்த மத்திய குழுவின் பரிந்துரை பேரில், நாடு முழுவதும் உள்ள 50 ரயில் நிலையங்களையும் மற்றும் 150 ரயில்களையும் தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஒவ்வொரு நாளும் இரண்டரை கோடி மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையோர் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர். எங்கள் ஊழியர்களும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கடுமையான வெப்பநாளிலும் கடுங்குளிரிலும் வேலை செய்கின்றனர். அதோடு, ரயில்பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் சாதாரண மக்கள் பயணம் செய்யும் வந்தே பாரத் ரயிலையும் தயாரிக்கிறோம். ஏழை மக்களுக்காகவே ரயில்வேத்துறை துவங்கப்பட்டது. ஆனால், தற்போது ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படுவதால் 5 சதவிகித மக்களுக்குத்தான் பயனளிப்பதாக உள்ளது.
ரயில்வே தனியார்மயம் கண்டித்து மிக விரைவில் வேலைநிறுத்த போராட்டம்: அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் அறிவிப்பு
- ரயில்
- தனியார்மயமாக்கல் வேலைநிறுத்தம்
- அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம்
- பொதுச்செயலர்
- ரயில்வே
- அகில இந்திய ரயில்வே தொழிலாளர் கூட்டமைப்பு