புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த புதுக்குப்பத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக வீராம்பட்டினம், நல்லவாடு கிராம மீனவர்கள் இடையே நீண்ட நாளாக மோதல் ஏற்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் நல்லவாடு மீனவர்களுடைய வலைகளை வீராம்பட்டினம் மீனவர்கள் எரித்துள்ளனர். இது தொடர்பாக தவலகுப்பம் போலீசார் 2 பேரை கைது செய்தனர். இந்நிலையில், நல்லவாடு-வீராம்பட்டினம் மீனவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, வலை போடுவதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.