சென்னை: ராஜிவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தும் சீமான் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலையை நியாயப்படுத்தியும், அதை செய்தவர்களை வரலாறு பாராட்டும் என்று பயங்கரவாதத்தை பகிரங்கமாக ஆதரித்து பேசியிருக்கிறார். இதன் மூலம் தடை செய்யபட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலை புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை ஆதரித்த தேசத்துரோக குற்றத்தை சீமான் செய்திருக்கிறார். அவரது அநாகரீக ஆணவ பேச்சை காங்கிரஸ் கண்டிக்கிறது. இந்திய அமைதி படை வீரர்கள் 2000 பேரை இலங்கை மண்ணில் கோழைத்தனமாக கொன்று குவித்தவர்கள் நன்றிகெட்ட விடுதலை புலிகள்.