திண்டிவனம்: திண்டிவனத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் சாலையில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த நபரை பிடித்து திண்டிவனம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவரிடம் இருந்து ரகசிய குறியீடு எழுதிய 100 ரூபாய் நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி இடைத்தேர்தலையொட்டி பிரசாரம் செய்வதற்காக நேற்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டி வருகை தந்தார்.
தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பும் வழியில் அமைச்சர் சி.வி சண்முகத்தின் தங்கை மகன் மறைவு குறித்து துக்கம் விசாரிப்பதற்காக திண்டிவனம் மொட்டையன் தெருவிலுள்ள அமைச்சர் வீட்டுக்கு நேற்று இரவு வந்தார். அப்போது முதல்வர் வரும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் முன்பு சந்தேகத்திற்கு இடமான ஒருவர் நீண்ட நேரமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்ததை போலீசார் கண்காணித்தனர்.