டெல்லி: காங்கிரஸ் கட்சியினர் ரபேலை வரவேற்றிருக்க வேண்டும், மாறாக அதை விமர்சித்து அறிக்கை வெளியிடுவது பாகிஸ்தானை பலப்படுத்தும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தல் நடக்க உள்ள அரியானா சென்ற ராஜ்நாத் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுவதாவது; ரபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் பாலகோட் தாக்குதலுக்கு எல்லை தாண்ட தேவை இருந்திருக்காது. ரபேல் விமானங்கள் மணிக்கு 2,130 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டவை. இயல்பாக 1,912 கிமீ வேகத்தில் பறக்கும். இதனால் எதிரிகளால் ஏவுகணைகளை வீசி தகர்ப்பது சிரமம். ஒருமுறை முழு எரிபொருள் நிரப்பினால் 3,700 கிமீ தூரம் வரை பயணிக்கும்.