சென்னை : சேவை வரி தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரனார். சேவை வரி செலுத்துவது தொடர்பாக சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததாக சரக்கு மற்றும் சேவை வரித் துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளித்தார். நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி செலுத்த வேண்டிய சேவை வரி தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரி, விஷாலுக்கு சம்மன் அனுப்பினார். இந்த சம்மனை ஏற்று ஆஜராகாமல் இருந்ததாக, விஷாலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.