மாமல்லபுரத்தில் முறைசாரா உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்

சென்னை: பிரதமர் மோடியை சந்திக்க 2 நாள் பயணமாக தனி விமானத்தில் சென்னை வந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங். மாமல்லபுரத்தை சுற்றி பார்க்கும் சீன அதிபர் இன்று மாலை கோவளத்தில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். நாளை கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆலோசனை நடத்தவுள்ளார். 2 நாடுகள் இடையே வர்த்தக மேம்பாடு, எல்லையில் அமைதி உள்ளிட்டவை பற்றி 2 பேரும் பேச வாய்ப்புள்ளது. தொடர்ந்து, மேள வாத்தியங்கள், கலைநிகழ்ச்சிகள் முழங்க தமிழக அரசு சார்பில் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Related Stories: