சென்னை: உலக தலைவர்கள் வந்தால் தான் தமிழகம் சுத்தமாகும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.திருமணத்துக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து குரோம்பேட்டை, பவானி நகரை சேர்ந்தவர் ஐடி ஊழியர் சுப (23). இறந்தார். இந்நிலையில், சுபயின் தந்தை ரவி தனது மகள் மரணத்துக்கு நஷ்டஈடாக ரூ.1 கோடி மற்றும் பல்வேறுகோரிக்கை கொண்ட மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், சரவணன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் வக்கீல் நீதிபதியிடம், சுப மரணம் தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்ற வேண்டும் என்று கூறினார். அப்போது, அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி இந்த வழக்கு ஏற்கனவே வேறு ஒரு அமர்வில் விசாரணையில் உள்ளது.சுபயின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டு அந்த தொகையும் வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு இன்னும் சிறையில் உள்ளனர் என்றார்.அப்போது, நீதிபதிகள், சீன அதிபர் வரவுள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து மகாபலிபுரம் வரை சாலைகள் முழுவதுமாக சீரமைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு தலைவர்கள் இங்கே வந்தால் தான் தமிழகம் முழுவதும் சுத்தமாகும். ஒரு குடியானவன் வீட்டுக்கு ராஜா செல்லும்போது அவர் செல்லும் வழியெல்லாம் சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது என்ற ஒரு குட்டிக் கதையை கூறினர்.