சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதற்கட்ட பணியாக மாநில தேர்தல் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு 92 ஆயிரத்து 771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான பயிற்சி முகாம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெற்றது. தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு, இவிஎம் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்தல், தேர்தலுக்கான பொருட்களை தயார் செய்தல், வாக்காளர்பட்டியல் தயாராக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் சென்னையில் பயிற்சி முகாம்
- பயிற்சி முகாம்
- மாவட்ட அலுவலர்கள்
- உள்ளாட்சித் தேர்தல்கள் உள்ளூராட்சித் தேர்தல்கள்
- பயிற்சி முகாமுக்கான அனைத்து மாவட்ட அலுவலர்களும்