தமிழகத்தில் தொடர்ந்து 6 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைவு: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து 6 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ..76.43, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.57 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய காரணிகளால் கடந்த சில மாதங்களாக பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலை வெகுவாக உயர்ந்து காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அவற்றின் விலையில் வீழ்ச்சி காணப்படுகிறது. அதன் அடிப்படையில் தொடர்ந்து 6வது நாளாக விலை குறைந்து, சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 18 காசும் டீசல் லிட்டருக்கு 11 காசும் குறைந்துள்ளது விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகனங்கள் வாங்கு வோர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஒரு நாளைக்கு 50 கீலோமீடர் துாரம் வாகனங்களை இயக்குபவர்களுக்கு கூடுதாலக ரூ.100 ல் இருந்து ரூ.150 வரை அதிகரி க்கிறது.

இதனால் மாதம் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரத்து 500 வரை செலவு அதிகரிக்கிறது. இந்நிலையில் வாகனங்கள் வாங்க முடிவு செய்தவர்கள் தங்கள் முடிவுகளை தற்போது நிறைவேற்றாமல் தள்ளிபோட்டு வருகின்றனர். இதனால் வாகனங்களின் விற்பனை சுமார் 20 சதவீதம் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: