இயற்கையை பாதுகாக்க கோரி ஓசூர் இன்ஜினியர் 631 கி.மீ. சைக்கிள் பயணம்

கன்னியாகுமரி: கரூர் மாவட்டம் ஆலத்தூரை சேர்ந்தவர் பார்வதி தங்கம் (26). ஓசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் இன்ஜினியராக உள்ளார். “இயற்கையை பாதுகாப்போம்” என்பதை வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். அதன்படி ஓசூர்-கன்னியாகுமரி இடையிலான 631 கிலோ மீட்டர் தூரத்தை 24 மணி நேரத்தில் கடக்க முடிவு செய்தார். இதையடுத்து ஓசூரில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.

அதைத் தொடர்ந்து நேற்று மாலை கன்னியாகுமரி காந்தி மண்டபத்தை வந்தடைந்தார். இது குறித்து பார்வதி தங்கம் கூறுகையில், நண்பர்கள், நலம் விரும்பிகள் உதவியுடன் இந்த சாதனை மேற்கொண்டேன். பயண பாதையில் சைக்கிள் 3 முறை பஞ்சர் ஆனது. மழை குறுக்கிட்டபோதும், நண்பர்கள் அளித்த உற்சாகத்தால் சாதனையை நிறைவு செய்துள்ளேன் என்றார்.

Related Stories: