சென்னை: மத்திய அரசின் ராஷ்டிர அவிஷ்கார் அபியான் திட்டத்தின் கீழ் தமிழக பள்ளி மாணவர்கள் 4 ஆயிரத்து 560 பேரை அண்டை மாநிலங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவர்களில் 960 பேரையும் 9 ஆம் வகுப்பு மாணவர்களில் 3 ஆயிரத்து 600 பேரையும் 4 மண்டலங்களாக பிரித்து 3 நாள் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திருவனந்தபுரம், மைசூர், திருப்பதி, ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு பல கட்டமாக மாணவர்கள் அழைத்து செல்லப்படவுள்ளனர்.
மத்திய அரசின் ''ராஷ்டிர அவிஷ்கார் அபியான்''திட்டத்தின் கீழ் தமிழக பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லலாம்: பள்ளிக்கல்வி இயக்ககம்
- ராஷ்டிரிய
- அவிஷ்கர் அபியான்
- பள்ளி மாணவர்கள்
- மத்திய அரசு
- சுற்றுப்பயணம்
- பள்ளி இயக்குநரகம்
- தமிழ்
- ராஷ்டிரிய