விமான பணி பெண்ணை தாக்கி மொபட் பறித்த 4 பேர் சிக்கினர்

பல்லாவரம்: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நிஷா (29) (பெயர் மாற்றப்பட்டுள்ளது),  குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கத்தில் தங்கி,  சென்னை விமான நிலையத்தில், தனியார் விமான நிறுவனத்தில் பணிப் பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், இரவு நேரத்தில் தனது தோழியுடன் மொபட்டில் திருநீர்மலை அடையாறு ஆற்றங்கரை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, 4 பேர் இவர்களை வழிமறித்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளனர். அதிர்ச்சியடைந்த இவர்கள் அலறி கூச்சலிட்டதால், ஆத்திரமடைந்த 4 பேரும் இவர்களை சரமாரியாக தாக்கிவிட்டு, இவர்களின் மொபட்டை பறித்துக்கொண்டு தப்பினர்.   

போலீசார் விசாரணையில், பல்லாவரத்தை சேர்ந்த ஷைன் (23), பிரேம்குமார் (22), அபினேஷ் (23), பெருங்களத்தூர் பார்வதி நகரை சேர்ந்த  செந்தில்குமார் (28) ஆகியோர் மொபட்டை பறித்து சென்றது தெரிந்தது. அவர்களை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 4 பேரும், நாகல்கேணியில் உள்ள பிரபல டிபார்ட்மென்ட் ஸ்டோரில் டெலிவரி பாயாக வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: