பல்லாவரம்: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நிஷா (29) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கத்தில் தங்கி, சென்னை விமான நிலையத்தில், தனியார் விமான நிறுவனத்தில் பணிப் பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், இரவு நேரத்தில் தனது தோழியுடன் மொபட்டில் திருநீர்மலை அடையாறு ஆற்றங்கரை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, 4 பேர் இவர்களை வழிமறித்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளனர். அதிர்ச்சியடைந்த இவர்கள் அலறி கூச்சலிட்டதால், ஆத்திரமடைந்த 4 பேரும் இவர்களை சரமாரியாக தாக்கிவிட்டு, இவர்களின் மொபட்டை பறித்துக்கொண்டு தப்பினர்.