திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே பாலராமபுரம் ரசல்புரம் பகுதியை சேர்ந்தவர் லலிதா(75). இவருக்கு இவருக்கு சுரேஷ், ஜெயா, தங்கச்சி, ஜெயகுமார் என 4 பிள்ளைகள் உள்ளனர். மகன் ஜெயகுமாருடன் தாய் லலிதா வசித்து வந்தார். மற்ற 3 பேரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். லலிதாவின் பெயரில் 30 சென்ட் நிலமும், வீடும், வங்கியில் 14 லட்சம் பணமும் இருந்தது. ஜெயகுமார் தாயை மிரட்டி இவற்றை தனது பெயருக்கு எழுதி வாங்கி உள்ளார். இது சகோதரர்களுக்கு ெதரியாமல் இருக்க அவர்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஜெயகுமார் தாய்க்கு சரியாக உணவு கொடுக்காமலும், பராமரிக்காமலும் அவரை வீட்டில் பூட்டி வைத்திருந்தார். இதனால் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமானது. மேலும் உடலில் புண்களும் ஏற்பட்டு அவை அழுகி கடும் வலியை ஏற்படுத்தியது.இது குறித்து தகவல் அறிந்த பாலராமபுரம் கிராம பஞ்சாயத்து தலைவி வசந்தகுமாரி மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் அங்கு விரைந்து சென்று ஜெயகுமாரிடம் வீட்டை திறக்குமாறு கூறினர். ஆனால் அவர் வீட்டை திறக்க மறுத்து விட்டார். இதையடுத்து பாலராமபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.