புழல் சிறை கைதி திடீர் சாவு

சென்னை: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி நெஞ்சுவலியால் இறந்தார். சென்னை மின்ட் பகுதியை சேர்ந்தவர் உஸ்மான் (43). இவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக 2015ல் போக்சோ சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை உஸ்மானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே சிறை காவலர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீஸ் வேனில் அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வழியிலேயே உஸ்மான் இறந்துவிட்டதாக கூறினர்.  இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: