நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தமிழகம், கேரளாவுடன் மத்திய அரசு ஆலோசனை

டெல்லி : நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தமிழகம், கேரள தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இரு மாநில அரசுகளுடன் காணொலி காட்சி மூலம் மத்திய அமைச்சரவை செயலர் ராஜீவ் கௌபா ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வக மையம் அமைப்பதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. சுற்றுசூழல்துறை செயலர் ஷம்பு கல்லோலிகர், வீட்டு வசதித் துறை செயலர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். நியூட்ரினோ மைய திட்ட இயக்குனர் விவேக் தாதர், கேரள தலைமைச் செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: