ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தொடங்கியது

சென்னை : ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தொடங்கியது. உயர்நீதிமன்ற பதிவாளர் நியமித்த ஊழல் கண்காணிப்பு பதிவாளர் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. சாய் சரவணன் முன்னிலையில் தேர்தல் ஆணைய அலுவலர்கள் 24 பேர் வாக்குகளை எண்ணுகின்றனர். ராதாபுரம் தொகுதியில் பதிவான 1508 தபால் வாக்குகளில், 203 ஓட்டுக்கள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. தற்போது, செல்லாததாக அறிவிக்கபட்ட 203 வாக்குகள், உட்பட 1508 தபால் வாக்குகளையும் எண்ண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: