புதுடெல்லி: இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனான ஐ.ஆர்.சி.டி.சி.யின் பங்குகளை வாங்க 100 மடங்கு அதிகமாக முதலீட்டாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். நிதி பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து 80,000 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், ரயில்வேயின் கீழ் இயங்கி வரும் அதன் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி.யின் சுமார் 11 சதவிகித பங்குகளை விற்று 645 கோடி ரூபாய் திரட்டும் நடவடிக்கையில் அரசு இயங்கியுள்ளது. ரயில்வே டிக்கெட், ரயில் நீர், கேட்டரிங் போன்ற சேவையில் ஈடுபட்டுள்ள ஐ.ஆர்.சி.டி.சி.யின் 2 கோடியே 2 லட்சம் பங்குகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், 225 கோடி பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.