சென்னை: பணியிட மாறுதல், பதவி உயர்வு வழங்குவதில் குளறுபடி நடந்து வரும் சூழ்நிலையில், பொதுப்பணித்துறையில் முதன்மை தனி அதிகாரியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணித்துறையில் பதவி உயர்வு, பணியிட மாறுதலில் கடும் குளறுபடி நிலவி வருகிறது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இல்லாத பணியிடத்துக்கு கண்காணிப்பு பொறியாளர் ஒருவர் ஸ்வர்மாவில் நியமிக்கப்பட்டார். அதேபோன்று, 2 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த உதவி பொறியாளர் துளசிராமன் என்பவரை காவிரி ஆற்றுப்படுகை தூர்வாரும் பணியை கண்காணிக்க நியமனம் செய்து முதன்மை தலைமை பொறியாளர் உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து அவர் அந்த நியமன ஆணையை ரத்து செய்தார். இருப்பினும் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.