சென்னை: மின் விபத்துகளை தவிர்ப்பது குறித்து, தமிழ்நாடு மின் ஆய்வுத் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மின் வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செய்வது நல்லது. ஐஎஸ்ஐ முத்திரை உள்ள தரமான மின்சாதனைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளக்குகளை எடுக்கும் போதும், பொருத்தும் போதும் சுவிட்ச்சை ஆப் செய்ய வேண்டும். உடைந்த சுவிட்ச் மற்றும் பிளக்குகளை உடனடியாக மாற்றுங்கள். கேபிள் டிவி வயர்களை மேல்நிலை வயர்களுக்கு அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மின் கம்பத்தின் மீது கொடி கட்டி துணிகளை காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும்.