புதுடெல்லி: ரயில்வேயின் இந்த ஆண்டுக்கான சுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலத்தின் ரயில் நிலையங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. ரயில்வேயில் கடந்த 2016ம் ஆண்டு முதல், 407 முக்கிய ரயில் நிலையங்களில் தூய்மை ஆய்வு நடத்தப்பட்டு சுத்தமான ரயில் நிலையங்கள் கண்டறியப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட தூய்மை ஆய்வில் இதன் எண்ணிக்கை 720 ரயில் நிலையங்களாக உயர்த்தப்பட்டதுடன், 109 புறநகர் ரயில் நிலையங்களும் முதன் முறையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பசுமை நடவடிக்கை உள்ளிட்டவை இந்த அறிக்கையில் மதிப்பிடப்பட்டது.