பரமக்குடி கல்லூரி வகுப்பில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு

பரமக்குடி:  பரமக்குடியில் கல்லூரி மாணவிக்கு வகுப்பறையில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, மாணவன் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஆங்கிலத்துறையில் இரண்டாமாண்டு வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்திக்  கொண்டிருந்தபோது, அதே  கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் சைவத்துரை அங்கு வந்தார். அவர், வகுப்பறைக்கு சென்று மாணவி ஒருவரை வெளியில் வருமாறு சத்தம் போட்டுள்ளார். பேராசிரியை தடுத்தும் அந்த மாணவியை கையை பிடித்து இழுத்ததாகவும், பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்பேரில், எமனேஸ்வரம் மகளிர் ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சைவத்துரை மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட ராஜீவ் நகரை சேர்ந்த முத்துக்குமார் ஆகியோர்  மீது போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: