மைத்துனி வீட்டில் பதுங்கி இருந்த போது பிரபல ரவுடி பினு மீண்டும் கைது

சென்னை: கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் மற்றும் துப்பாக்கிகள் விற்பனை உள்ளிட்ட வழங்குகளில் தொடர்புடையவர் பிரபல ரவுடி பினு(58). கடந்த ஆண்டு கூடுவாஞ்சேரி அருகே லாரி ஷெட்டில் 150 ரவுடிகளுடன் பினு அரிவாளால் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடினார். இதுகுறித்து தகவல் அறிந்த தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று துப்பாக்கி முனைவில் 74 ரவுடிகளை கைது செய்தனர். ஆனால் ரவுடி பினு தலைமறைவானான். பின்னர் போலீசார் தேடுவதை அறிந்த பினு அம்பத்தூர் துணை கமிஷனர் முன்னிலையில் சரணடைந்தான். அதன் பிறகு ஜாமினில் வெளியே வந்த பினு, மீண்டும் வேலூரில் பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த போது வேலூர் போலீசார் கைது செய்தனர்.

அதை தொடர்ந்து ஆயுதம் விற்பனை வழக்கில் தனிப்படை போலீசார் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு எழும்பூரில் காரில் வரும் போது ரவுடி பினுவை கைது செய்தனர். பிறகு நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த ரவுடி பினு காவல் நிலையத்தில் கையெழுத்து போடாமல் மீண்டும் தலைமறைவானான். அதன்படி பிறகு தனிப்படை போலீசார் மீண்டும் பினுவை தேடி வந்தனர்.இந்நிலையில் திருவல்லிக்கேணி கல்லறை தோட்டம் பகுதியில் உள்ள பினுவின் மனைவி சகோதரி லட்சுமி வீட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீசார் ேநற்று முன்தினம் இரவு அதிரடியாக கல்லறை தோட்டத்திற்குள் புகுந்து ரவுடி பினுவை மீண்டும் கைது ெசய்தனர்.

Related Stories: