தூய்மைப்பணி தொடர்பான குறைகளை தெரிவிக்க தனி செயலி சென்ட்ரலில் தொடக்கம்

சென்னை : மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் தூய்மை பணி தொடர்பான குறைகளை தெரிவிக்க தனி  செயலியை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ்  தொடங்கி வைத்தார். இந்த செல்போன் செயலி மூலம் ரயில் நிலையங்களில் நடைபெறும் தூய்மை  பணி குறித்த நிறைகுறைகளை தெரிவிக்கலாம்.  இதை தவிர்த்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், ரயில் நிலைய  நடைமேடையில் ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக ரூ.5 லட்சம் செலவில் செக்வே எனப்படும் 6 நவீன வாகனங்களையும் ஜான் தாமஸ் தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மூலம்  நடைமேடைகளில் ரயில்வே பாதுகாப்பு படையினர் 24 மணி  நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

Related Stories: