சென்னை: பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தேசிய அளவில் 4 ஆலோசகர்களை தலைமை அலுவலகம் நியமித்துள்ளது. அவர்களில் தமிழகத்தின் சார்பில் முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநரும் இடம் பெற்றுள்ளார். பாரத சாரண, சாரணியர் இயக்கத்திற்கு தேசிய அளவில் ஆலோசகர்கள் நியமனம் என்பது புதுடெல்லியில் உள்ள தேசிய அளவிலான சாரண சாரணியர் தலைமை அலுவலகம் மூலம் நியமிக்கப்படுவார்கள். இந்நிலையில், தற்போது தேசிய அளவிலான ஆலோசகர்கள் நியமித்து புதுடெல்லியில் உள்ள தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.