திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே, அழகாபுரியில் உள்ள போலீஸ் செக்போஸ்ட் சில தினங்களாக மூடி கிடப்பதால் சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள அழகாபுரியில் போலீஸ் செக்போஸ்ட் உள்ளது. மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் இந்த செக்போஸ்டை கடந்து செல்கின்றன. இந்த செக்போஸ்டில் பணியில் உள்ள போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு சமூக விரோத செயல்களை தடுத்து வந்தனர்.