சென்னை: அந்தமானில் உயிரிழந்து சென்னை கொண்டுவரப்பட்ட சி.ஆர்.பி.எப். வீரரின் உடலுக்கு அவரது மகள் அஞ்சலி செலுத்தியது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. வாணியம்பாடியை சேர்ந்தவர் செந்தில்குமார். சி.ஆர்.பி.எப். அந்தமான் பிரிவில் தலைமை காவல் அதிகாரியாக பணிபுரிந்து வந்த இவர் எதிர்பாரத விதமாக ராட்சத கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அவரது உடலுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.