பூஞ்ச்: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பாதுகாப்பு படயினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாப்பூர் மற்றும் கிர்னி ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இன்று காலை 7.45 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் மோட்டார் குண்டுகள் மற்றும் சிறிய வகை துப்பாக்கிகளை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பாதுகாப்பு படையினர் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், இதுவரை யாரும் காயமடைந்ததற்கான தகவல்கள் வெளியாகவில்லை.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல்: பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி
- துருப்புக்கள்
- பாகிஸ்தான்
- பூஞ்ச்
- மாவட்டம்
- ஜம்மு
- பாதுகாப்பு படைகள்
- காஷ்மீர்
- யுத்த நிறுத்த
- எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு