செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்றிரவு நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலையில் மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர் சந்தனம், தேன் உள்ளிட்ட பூஜை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து உற்சவர் அங்காளம்மனுக்கு மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோயில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
- மகாமலயனூர் அங்கமலேமன் கோயில்
- தரிசனம்
- மில்லியன் கணக்கான
- பக்தர்கள்
- மகாமலயனூர் அங்கமாலியம் கோயில்
- மகாமலயனூர் அங்கமலமன் கோயில்