ஆலந்தூர்: ஆதம்பாக்கம் சுரேந்திரா நகர், மேடவாக்கம் பிரதான சாலை போன்ற பகுதிகளில் உள்ள வீடு, கடைகள் போன்றவற்றில் ஒரு வாலிபர் புகுந்து உருட்டு கட்டையால் பலரையும் தாக்கி வருவதாக ஆதம்பாக்கம் போலீசாருக்கு புகார் வந்தது.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாலன், எஸ்ஐ திருமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்ட வாலிபரை பிடிக்க முயன்றபோது அவர், போலீசாரையும் ஆக்ரோஷத்துடன் தாக்க முற்பட்டார். அந்த வாலிபர் சைக்கோவாக இருக்கக்கூடும் என்று கருதிய போலீசார், அவரை பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து, கயிற்றால் கட்டி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.பொதுமக்களை சரமாரி தாக்கிய ஒடிசா வாலிபர் கைது: சைக்கோ ஆசாமியா என விசாரணை
- ஒடிசா
- பொதுமக்கள்
- விசாரணை
- ஒடிசா இளைஞர்களுக்கான சைக்கோ அசாமியா பொதுமக்களை விசாரித்தல்: சைக்கோ அசாமியா