திருச்செந்தூர் முருகன் கோயில் ராஜகோபுரத்தை திறக்க வழக்கு: அறநிலையத்துறை முடிவெடுக்க உத்தரவு

மதுரை:  தூத்துக்குடியைசேர்ந்த நாராயணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலின் மேற்கே ராஜகோபுரம் அடைக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழாவில் சுவாமி  திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் ராஜகோபுரவாசல் திறக்கப்படுகிறது. அப்போது பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை. எனவே, ராஜகோபுரத்தை திறந்து பக்தர்கள் செல்லஅனுமதிக்க உத்தரவிட வேண்டும்’ என்று  கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் விசாரித்து, ‘‘அறநிலையத்துறை கமிஷனரிடம் மீண்டும் மனு அளிக்க வேண்டும். இந்த மனுவின் மீது அவர் உரிய முடிவெடுக்க வேண்டும்’’ என  உத்தரவிட்டனர்.

Related Stories: