காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று நடந்த அதிபர் தேர்தலின்போது தலிபான் தீவிரவாதிகள் பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். ஆப்கானிஸ்தானின் தற்போதைய அதிபர் அஷ்ரப் கனியின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால் அங்கு அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி மற்றும் அவரது தலைமை நிர்வாகியான அப்துல்லா உள்ளிட்ட 18 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் பிரசாரங்களின் போது, பொதுமக்கள் வாக்களிக்க கூடாது என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், தலிபான்கள் அதிகளவில் குண்டுவெடிப்பு, வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதால், நேற்று நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.