சென்னை: சென்னை விமான நிலையத்தில் தங்கச்செயின் மற்றும் நாணயங்களை கடத்தில் 2பேர் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூரில் இருந்து ஏர்லைன்ஸ் விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை 1.10 மணிக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினர். அப்போது சிங்கப்பூரை சேர்ந்த கயாதர்ஸி (31) என்ற பெண் சிங்கப்பூரில் இருந்து சுற்றுலா பயணிகள் விசாவில் சென்னை வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார். அவரது உடமைகளை சோதனை செய்தபோது உடமைகளில் எதுவும் இல்லை.
பெண் சுங்க அதிகாரிகள் உதவியுடன் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை நடத்தினர். அவரது உள்ளாடைகளில் 8 தங்க செயின்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மொத்த எடை 477 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ரூ 18.5 லட்சம்.மேலும் நேற்று காலை 7.30 மணிக்கு துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சவதேச விமான நிலையத்துக்கு வந்தது. விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது திருச்சியை சேர்ந்த முகமது சலீம் (39) என்பவர் சுற்றுலா பயணியாக துபாய் சென்று விட்டு திரும்பி வந்திருந்தார். சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் அவரது பேண்ட் பாக்கெட்டில் 4 தங்க நாணயங்கள் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. அதன் எடை 193 கிராம். அதன் சர்வதேச மதிப்பு 7.5 லட்சம். இருவரையும் கைது செய்தனர்.