புதுச்சேரி: நீதிமன்ற உத்தரவுப்படி கிரண்பேடி செயல்படவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநர் இடையூறு செய்யக்கூடாது என நிதியரசர்கள் உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டால் கிரண்பேடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என கூறியுள்ளார்.