கண்டமனூர்: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்க கூடிய உதித் சூர்யா வழக்கில் தற்போது திடீர் திருப்பமாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. உதித் சூர்யாவுக்கு உதவியதாக 2 பேராசிரியர்கள் மீது மருத்துவக் கல்லூரி முதல்வர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ மாணவர் உதித் சூர்யா முறைகேடு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது புதிய திருப்பமாக தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில் ஆள்மாறட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா,