மதயானைபட்டி மணல்குவாரியை ஆய்வு செய்து அக்டோபர் 3க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: புதுக்கோட்டை மதயானைப்பட்டியல் உள்ள அரசு மணல் குவாரி செயல்பாட்டை அக்டோபர் 3 வரை நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணல் குவாரி தொடர்பான விதியை முறையாக பின்பற்றவில்லை என சைமன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். மணல் குவாரி விதிமீறல் பற்றி ஆய்வு செய்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மணல் குவாரிகளை ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மதயானைபட்டி மணல்குவாரியை ஆய்வு செய்து அக்டோபர் 3க்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: